கவர்ச்சி நடிகை திடீர் கைது.. கொரோனா ஊரடங்கு மீறியதால் வழக்கு..

பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இணைய தளத்தில் கடந்த மாதம் தனது நிர்வாண படத்தை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று அவர் மும்பையில் தனது பாய் பிரண்டுடன் சேர்ந்து ஜாலியாக காரில் ஊர் சுற்றினார்.மும்பையில் கொரோனா தொற்று அதிகம் பரவிய நிலையில் ஊரடங்கு விதிகள் கடுமையாகக் கடைப் பிடிக்கப்படுகிறது. கொரோனா விதிகளை மீறி காரில் சுற்றித் திரிந்த பூனம் மற்றும் அவரது பாய் பிரண்டை போலீசார் கைது செய்ததுடன் காரை பறிமுதல் செய்தனர். பூனம் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை எச்சரித்து விடுதலை செய்தனர்.

More News >>