நாடு முழுவதும் 70,756 பேருக்கு கொரோனா.. பலி 2293 ஆக உயர்வு..

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இது வரை 2293 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்னும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. தினமும் புதிதாக 3 ஆயிரம் பேருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே 12) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் இது வரை மொத்தம் 70,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 22,454 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2293 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 3604 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 84 பேர் பலியாகியுள்ளனர்.மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 8002 பேருக்கு கொரோனா பாதித்ததில், 53 பேர் பலியாகியுள்ளனர்.

More News >>