சென்னை கொரோனா மையமாக ராயபுரம்.. கோடம்பாக்கத்திலும் அதிக பாதிப்பு..

சென்னையில் கொரோனா அதிகம் பாதித்துள்ள மண்டலங்களாக ராயபுரம், கோடம்பாக்கம் ஆகியவை உள்ளன.தமிழகத்தில் கொரோனா பரவுவது இது வரை கட்டுப்படவில்லை. நேற்று மாலை நிலவரப்படி 8002 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் இது வரை 4371 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 743 பேர் குணமடைந்துள்ளனர். 32 பேர் பலியாகியுள்ளனர். மண்டல வாரியாக கொரோனா பாதிப்பைக் கவனித்தால், ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில்தான் அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

திருவெற்றியூர் மண்டலத்தில் 98 பேர், மணலி-50, மாதவரம்-65, தண்டையார்பேட்டை-327, ராயபுரம்-742, திரு.வி.க.நகர்-590, அம்பத்தூர்-224, அண்ணா நகர்-349, தேனாம்பேட்டை-458, கோடம்பாக்கம்-713, வளசரவாக்கம்-379, ஆலந்தூர்-46, அடையாறு-212, பெருங்குடி-51, சோழிங்கநல்லூர்-52 பேர் என்று கொரோனா பாதித்துள்ளது.

More News >>