மருத்துவமனையில் இருந்து மன்மோகன்சிங் டிஸ்சார்ஜ்..

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த மன்மோகன்சிங், தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் பின்னர், வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்குக் கடந்த 10ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து, அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது பூரண குணமடைந்து விட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என்று தெரிந்ததால் அவரை மருத்துவமனையிலிருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்தனர். வீட்டிலேயே சில நாட்கள் அவர் ஓய்வெடுக்க உள்ளார். ஏற்கனவே மன்மோகன்சிங்கிற்கு கடந்த 2009ம் ஆண்டில் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டிருக்கிறது.

More News >>