கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே விளக்கம்.. போலீஸார் கைது செய்தார்களா?

பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவர் அடிக்கடி தனது படுகவர்ச்சியான படங்கள், டாப்லெஸ், நிர்வாண படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று மும்பையில் கொரோனா ஊரடங்கை மீறி பாய்பிரண்டுடன் சொகுசு காரில் ஊர் சுற்றியதாகவும் அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் எச்சரித்து அனுப்பியதாகவும் மும்பை பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்தி வெளியாகின.

இதுகுறித்து பூனம்பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது,ஹலோ, நான் நேற்று கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் வீட்டிலேயே தான் இருக்கிறேன். நேற்று மட்டும் மாரத்தான் ஓட்டம் போல் இடைவிடாமல் தொடர்ச்சியாக 3படங்கள் பார்த்தேன். என்னைப் பற்றி வதந்தி பரப்பாதீர்கள்.இவ்வாறு பூனம் பாண்டே கூறி உள்ளார்.

More News >>