இந்தியாவில் கொரோனாவுக்கு 2,415 பேர் உயிரிழப்பு.. 74,281 பேருக்கு நோய்ப் பாதிப்பு..

இந்தியாவில் இது வரை 74,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 2,415 பேர் பலியாகியுள்ளனர்.உலகம் முழுவதும் பரவியிருக்கும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. தினமும் 3 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவி வருகிறது.மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே 13) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் இது வரை மொத்தம் 74,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 24,386 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2415 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 3525 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 122 பேர் பலியாகியுள்ளனர்.மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் 24,427 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 721 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 8,903 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 537 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 8718 பேருக்கு கொரோனா பாதித்ததில், 61 பேர் பலியாகியுள்ளனர்.

More News >>