போலீஸை பாராட்டி ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோ..
நடிகை ஆண்ட்ரியா கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கிறார். இன்று அவர் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் சென்னை போலீஸார் இந்த கொரோனா காலகட்டத்தில் கடுமையாக உழைக்கின்றனர். தங்களை மிகவும் வருத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களுக்கு எனது சல்யூட் எனத் தெரிவித்திருப்பதுடன் இந்த கொரோனா பாதிப்பிலிருந்து அனைவரும் விரைவில் மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.