குஜராத்தில் பயங்கர விபத்து: கால்வாயில் லாரி கவிழந்து 26 பேர் பலி

அகமதாபாத்: திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுக்கொண்டிருந்தபோது ட்ரக் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்பா-வ்நகர் நெடுஞ்சாலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக 26 பேருக்கும் மேற்பட்டோர் ட்ரக்கில் இன்று அதிகாலை சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, பாவ்நகர் என்ற பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ட்ரக் தாறுமாறாக ஓடி அங்கிருந்த சாக்கடைக் கால்வாயில் விழுந்தது.

இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 26 பேர் உயிரிழந்தனர். மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, படுகாயங்களுடன் உயிர் தப்பிய 12 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். சுபநிகழ்ச்சிக்காக சென்றபோது 26 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

More News >>