நாடு முழுவதும் 78,003 பேருக்கு கொரோனா பாதிப்பு..

நாடு முழுவதும் 78,003 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இது வரை இந்த வைரஸ் நோய்க்கு 2549 பேர் பலியாகியிருக்கின்றனர்.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது. தினமும் புதிதாக 3 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே 14) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் இது வரை மொத்தம் 78,003 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 26,235 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 49,219 பேருக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2549 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 3722 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல், நேற்று மட்டும் கொரோனா பாதித்த 134 பேர் பலியாகியுள்ளனர்.மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 8002 பேருக்கு கொரோனா பாதித்ததில், 53 பேர் பலியாகியுள்ளனர்.

More News >>