பார்சிலோனா வீதியில் நடனம் ஆடிய ஸ்ரேயா.. மழையில் நனைந்தபடி ஆட்டம்..

நடிகை ஸ்ரேயா கணவருடன் ஸ்பெயினில் தங்கி இருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த இருவரும் நேற்று பார்சிலோனா வீதியில் நடனமாடினார். ஸ்ரேயாவின் ஆட்டத்தைக் கண்டு உற்சாகம் அடைந்த அவரது கணவரும் இஷ்டத்துக்குக் குத்தாட்டம் போட்டார்.இது பற்றி தெரிவித்துள்ள ஸ்ரேயா. பார்சிலோனாவில் மழையில் நனைந்தபோது மழை படத்தில் இடம்பெற்ற,நீ வரும்போது நான் மறைவேனா என்ற பாடல் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் அப்பாடலுக்கு நடனம் அமைத்த பிருந்தா, கோபாலுக்கு நன்றி எனத் தெரிவித்தார்.

More News >>