ஏழை விவசாயிகளுக்கு உதவ சத்யராஜ் மகள் கோரிக்கை.. அமைச்சருக்குக் கடிதம் அனுப்பினார்..

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா நியூட்ரினிஸ்ட்டாக இருக்கிறார். இவர் விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது. ஒரு நியூட்ரினிஸ்ட்டாக உணவே மருந்து என்பதை அறிந்திருக்கிறேன். நிரந்தரமான விவசாயம்தான் உணவு பற்றக்குறையைப் போக்கும். கொரரோனா தொற்று பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட லாக்டவுனால் சிறுவிவசாயிகளின் வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. மற்ற துறையினரைப் போல் விவசாயிகளிடம் சேமிப்பிற்கு வழியில்லை. இதனால் அவர்கள் வாழ்வு பின்தங்கி இருக்கிறது.எனவே சிறுவிவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் இழப்பீட்டை ஈடுகட்டி ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் திவ்யா கூறி உள்ளார்.

More News >>