ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது..

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தினமும் 500 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. நேற்று சற்று குறைந்து 447 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி 9674 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இது வரை 5625 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. மண்டல வாரியாக கொரோனா பாதிப்பைக் கவனித்தால், ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில்தான் அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.திருவெற்றியூர் மண்டலத்தில் 127 பேர், மணலி-75, மாதவரம்-85, தண்டையார்பேட்டை-437, ராயபுரம்-971, திரு.வி.க.நகர்-699, அம்பத்தூர்-276, அண்ணா நகர்-468, தேனாம்பேட்டை-608, கோடம்பாக்கம்-895, வளசரவாக்கம்-461, ஆலந்தூர்-67, அடையாறு-310, பெருங்குடி-72, சோழிங்கநல்லூர்-65 பேர் என்று கொரோனா பாதித்துள்ளது.

More News >>