ஷங்கர், உதவியாளர் டூ வீலெர் விபத்தில் பலி.. இந்தியன் 2 விபத்து நடத்த சில மாதத்தில் சோகம்..

திரையுலகில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புப் பணிகள் முடங்கியிருக்கின்றன. எனவே இயக்குனர்கள் முதல் அனைத்து பணியாளர்களும் வேலையின்றி இருக்கின்றனர். இந்நிலையில் தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக ஐ உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிய வெங்கட் பக்கார் என்ற அருண் என்பவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிய படத்தில் இயக்குனராக அறிமுகமாக வாய்ப்பு பெற்றார்.

ஜீ வி. பிரகாஷ் நடிக்கும் 4ஜி என்ற படத்தை இயக்குகிறார் அருண் பிரசாத் . இதன் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தன. இப்படத்தை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இன்று அருண் பிரசாத் மேட்டுப் பாளையத்துக்கு டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் உயிரிழந்தார்.

கோலிவுட்டில் இந்தச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் நடந்த இந்தியன் 2 படப் பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் சம்பவ இடத்தில் நசுங்கி இறந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் ஷங்கர் குழுவினருக்கு மற்றொரு ஷாக்காக இந்த சம்பவம் அனைத்து விட்டது.

More News >>