ஓவியங்களை ஏலம் விடும் ரஜினி நடிகை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா மகள் ஆவார். சோனாக்ஷி ஓவியங்கள் வரைவதில் கைதேர்ந்தவர். தனது ஒய்வு நேரங்களில் முழுநேரமும் அற்புதமான கலைநயம் மிக்க ஓவியங்கள் வரைந்து வீடு நிறையக் குவித்து வைத்திருக்கிறார். அந்த ஓவியங்களை ஏலம் விட முடிவு செய்திருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பதை வீடியோ மூலம் விளக்கியிருக்கிறார்.

அவர் கூறியதாவது : இந்த ஓவியங்களை என் காதலை முழுவதுமாக நிறைத்து வரைந்திருக்கிறேன் என் மனதுக்கு அமைதி, ரிலால்ஸ் தேவைப்படும் போது இவற்றை வரைவேன்.கொரோனா ஊரடங்கால் தின சம்பளக்காரர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஒருவேளை உணவு கூட சாப்பிட முடியாமல் பசியால் வாடுகின்றனர். கஷ்டத்தில் இருக்கும் சக மனிதருக்கு உதவாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா? அப்படிக் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவதற்காகவே நான் வரைந்த ஓவியங்களை ஏலம் விடுகிறேன். யார் அதிக விலைக்கு ஏலம் கேட்கிறார்களோ அவர்கள் ஓவியத்தை பெறலாம். அந்த ஓவியம் உங்கள் வீட்டை அலங்கரிக்கும் என் மனதுக்கு நெருக்கமாக நீங்கள் இருப்பீர்கள். இதில் வரும் வருமானம் சம்பளம் இல்லாமல் வாடும் தின சம்பளதாரர்களுக்கு அவர்களின் உணவு தேவையைப் பூர்த்தி செய்ய முறைப்படி உதவப்படும். இவ்வாறு சோனாக்ஷி சின்ஹா கூறினார்.

More News >>