படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? 17ம் தேதிக்குப் பிறகு முடிவு..

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழ்த் திரைப்பட பணிகள் சுமார் 50 நாட்களுக்கு மேலாக முடங்கின. சமீபத்தில் தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதிதந்தது. ஆனால் சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்படவில்லை.இது பற்றி செய்தித் துறை அமைச்சர் கடம்புயூர் ராஜுவிடம் கேட்ட போது, ' ஊரடங்கு முடியும் 17ம் தேதிக்குப் பிறகு படப்பிடிப்பு எப்போது தொடங்குவது என்று முதல்வர் முடிவு செய்வார்' என்றார்.

இதற்கிடையில் படப்பிடிப்பு பணிகளுக்கு அனுமதி தந்தால் சமூக இடைவெளி கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து கொரோனாகால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு படப்பிடிப்பு பணிகள் நடத்தத் தயாராக இருப்பதாகப் படத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

More News >>