மிஷ்கின் இயக்கத்தில் அருண் விஜய்..

இயக்குனர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தைக் கடைசியாக இயக்கினார்.அடுத்து விஷால் நடிக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் இயக்கி வந்தார். இதில் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படத்தை இயக்குவதிலிருந்து விளக்கினார் மிஷ்கின் . அடுத்த எந்த படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அருண் விஜய் படம் இயக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு நாளில் செல்போன் மற்றும் ஸ்கைப் மூலம் மிஷ்கின் அருண் இருவரும் பேசினர். அப்போது மிஷ்கின் சொன்ன கதை அருணுக்குப் பிடித்துவிடவே நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால் இதுபற்றி அதிகாரப் பூர்வ அறிவிப்பு ஊரடங்கு முடிந்த பிறகே வெளியாகும் என்று தெரிகிறது. இது தவிரச் சிம்பு நடிக்கும் படமொன்றையும் மிஷ்கின் இயக்க உள்ளார்.

More News >>