பிரியா பவானி சங்கர் காதல் முறிந்தது? விரக்தியால் தனிமையை நாடியதால் சந்தேகம்..

மான்ஸ்டர், மாபியா படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட நாள் பாய் பிரண்டும் காதலனுமான ராஜவேல் புகைப்படத்தை வெளியிட்டார். அப்போது 10 வருடத்துக்கு முன் நான் அழகில்லாதவள் என்று மற்றவர்களால் பழிக்கப்பட்டபோது என்னிடம் அன்புகாட்டிப் பழகிய நீ இப்போதும் அதேபாசத்துடன் என்னுடன் அன்புகாட்டுகிறாய் என்று தனது காதலை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் பிரியா பவானி தான் தனிமையாக மொட்டை மாடியில் நிற்கும் படத்தை வெளியிட்டு விரக்தியான ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் சித்ரா பௌர்ணமி இரவு!போன வருஷம் இதே நாள், கிரிவலம் போன, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்னு பிரண்டுசொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன். கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார். ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாகப் பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்லை உலகமே மாறிடுச்சு.

நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளைப் பற்றிக்கொண்டுகிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்குத் தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்? கேட்டதைத் தராமல் நல்லதைத் தந்த கடவுள் மேலயும் ,சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாகத் தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்பு மின்றி நான், கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாகத் தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி.

மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும்.வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு.இவ்வாறு பிரியா பவானி சங்கர் கூறி உள்ளார்.பிரியா பவானியின் இந்த பதிவு அவரது காதல் முறிவை காட்டுகிறது என்று ஒரு தரப்பும், இது அவரது கவித்துவமான திறனைக் காட்டுகிறது என்று வேறு சிலரும் கூறுகின்றனர். பிரியா பவானி சங்கர் தற்போது தமிழில் பொம்மை, இந்தியன்2, காலத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

More News >>