லாக் டவுனில், கேட் லேடி ஆன ஸ்ருதி ஹாசன்..

நடிகை ஸ்ருதிஹாசன் இன்னமும் லாக் டவுன் மூடிலிருந்து வெளியில் வரவில்லை. தனது வீட்டில் தனிமையில் இருக்கும் அவர் தன்னை ஏதாவது ஒரு விதத்தில் பிஸியாக வைத்திருக்கிறார். சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது, இசையில்லயிப்பது அவற்றையெல்லாம் ரசிகர்களுடன் பகிர்வது எனப் பொழுதைப் பயனுள்ளதாகக் கழிக்கிறார். லாக்டவுனில் ஸ்ருதி தனியாக இருக்கிறார் என்று பார்த்தால் அவருக்குத் துணையாக கிளாரா இருக்கிறார் என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார். கிளாரா யார்? வேறுயாருமல்ல ஸ்ருதி வளர்க்கும் செல்ல பூனைக் குட்டி.

ஸ்ருதியின் மடியில் ஏறி அமர்ந்து கொள்வதும் ஓடி விளையாடுவதுமாக கிளாரா ஸ்ருதியின் நாட்களைப் போரடிக்காமல் செய்கிறார். ஸ்ருதி சொல்லும் ஆர்டர்களையும் கேட்டு அதன்படி கிளாரா நடந்துகொள்கிறது. ரன் என்றதும் மாடிபடி ஏறி ஓடுவதும், கம் டவுன் என்றதும் படியில் இறங்கி ஓடிவருவது மாக ஸ்ருதியை மகிழ்விக்கிறது கிளாரா. இதுபற்றி கூறியிருக்கும் ஸ்ருதி,கிளாராவுக்கு மிகவும் நன்றி. லாக் டவுனில் எனக்கு உற்ற தோழியாக இருக்கிறாள். என்னை கேட் லேடி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் என்றார்.

More News >>