ரஜினியின் பேட்ட வில்லனுக்கு கொரோனா டெஸ்ட்.. குடும்பத்துடன் 14 நாள் தனிமை..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். இவர் சில தினங்களுக்கு முன் மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள புத்ஹனா கிராமத்தில் உடல் நிலை பாதித்திருக்கும் தனது தாயைப் பார்க்க குடும்பத்தினருடன் வந்தார். அப்பகுதியில் நவாஸுதீனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் 14 நாட்களுக்கு அவரையும் குடும்பத்தினரையும் வீட்டில் தனிமையில் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுபற்றி நவாஸுதீன் கூறும்போது, சமீபத்தில் எனது சகோதரி இறந்து விட்டார். மேலும் 71 வயதாகும் எனது தாயாருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. அதுபற்றி நேரில் விசாரிக்க குடும்பத்தினருடன் வந்தேன். அதே சமயம் மாநில அரசு விதித்திருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளைக் கடைப் பிடித்தேன். தற்போது புத்ஹனாவில் உள்ள வீட்டில் 14 நாட்கள் எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>