தொழில் அதிபருடன் வரலட்சுமிக்கு கல்யாணமா? என்ன சொல்கிறார் நடிகை..

போடா போடி, தாரை தப்பட்டை என ஆரம்பக்கால கட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த வரலட்சுமி சரத்குமார் தற்போது வில்லி உள்ளிட்ட பிரதான வேடங்களில் நடிக்கிறார். சில தினங்களாக அவரைப் பற்றி திருமண கிசுகிசுக்கள் பரவிய வண்ணம் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்புக்கு முழுக்கு போடவுள்ளதாகவும் கிரிக்கெட் விளையாட்டு தொடர்புடைய தொழில் அதிபர் ஒருவரை வரலட்சுமி காதலிப்பதாகவும் கிசுகிசுவுக்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

இதுகுறித்து வரலட்சுமி பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது,என் திருமணம்பற்றி எனக்குத்தான் கடைசியாகத் தெரிய வருகிறது. அது எப்படி நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் வெறிபிடித்து அலைவது ஏன்? எனக்குத் திருமணம் நடந்தால் அதுபற்றி கூரை மீது நின்று நானே எல்லோருக்கும் உரக்கச் சொல்வேன். இதெல்லாம் மீடியாக்கள் செய்யும் வேலை. நான் திருமணமும் செய்யவில்லை, நடிப்புக்கு முழுக்கு போடுவதாகவும் இல்லைஎன்றார் வரலட்சுமி.

More News >>