சமூக இடைவெளி விட்டு படப்பிடிப்பு நடத்துவது எப்படி? மினிஸ்டருக்கு டிரெய்லர் காட்டுகிறார் ராஜமவுலி..

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் டிவி ஹூட்டிங் நடத்த அனுமதி அளித்தது. இதற்கிடையில் தெலுங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான குழு தெலுங்கானா அமைச்சரிடம் மனு அளித்தனர்.

படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தால் எப்படி சமூக இடைவெளி கடைப்பிடித்துப் படப்பிடிப்பு நடத்துவீர்கள் அதை ஒரு டெஸ்ட் ஷூட் செய்து காட்ட முடியுமா குழுவினரிடம் அமைச்சர் கேட்டார். அதைக் குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.அமைச்சருக்கு டெஸ்ட் ஷூட் எடுத்துக் காட்ட இயக்குனர் ராஜமவுலி முடிவு செய்துள்ளார். தற்போது அவர் இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் டெஸ்ட் ஷூட் நடத்தி அதனை அமைச்சருக்குக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார். அதை அமைச்சர் ஏற்கும் நிலையில் விரைவிலேயே படப்படிப்பு நடத்த அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண், ஜூனியர் என். டி. ஆர் நடிக்கின்றனர்.

More News >>