100 ஆட்டோக்களுக்கு கொரோனா தொற்று பாதுகாப்பு உபகரணம்.. நடிகை பிரணிதா உதவிக்கரம்..

சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததுடன் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படம் உள்ளிட்ட பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் பிரணிதா சுபாஷ். இவர் பெங்களூரில் வசிக்கிறார். கொரோனா தொற்று காலத்தில் தொழிலாளர்கள், ஏழை எளியவர்களுக்கு உதவி வழங்கத் தொடங்கியவர் அதனை ஊரடங்கு தடை காலம் முழுவதும் செய்து வருகிறார். ஏற்கனவே தன் கையால் சமைக்கும் உணவை நூற்றுக்கணக்கானவர்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று பெங்களூருவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து ஆட்டோக்கள் ஓடத் தொடங்கின. 100 ஆட்டோ டிரைவருக்கும் பயணிகளுக்கும் இடையே தடுப்பை ஏற்படுத்தும் பிளாஷ்டிக் ஷீட் மற்றும் சேனிடைசர்கள் வழங்கினார். 100 ஆட்டோக்கரர்கள் மூன்று தெருக்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி ஒவ்வொரு டிரைவருக்கும் நேரில் சென்று பிரணிதா அளித்தார். இதனை வீடியோவாக பிரணிதா தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

More News >>