அப்பா, அம்மா ஞாபகத்தில் பிரபல நடிகை.. கொரோனா தடையால் உருக்கம்...

கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தவர் தீபிகா படுகோன். இந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர் கொரோனா தடை காலத்தில் மும்பையில் உள்ள வீட்டில் கணவர் ரன்வீர் சிங் உடன் வசித்து வருகிறார். அவரிடம். நீங்கள் முதல் முக்கியத்துவம் கொடுத்து இணைய தள பக்கத்தில் பதிய விரும்பும் விஷயம் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு தீபிகா உணர்ச்சிவசமான பதில் அளித்தார்.

அவர் கூறும்போது,கொரோனா தடையால் எனது அப்பா, அம்மா, தங்கையைப் பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது. அவர்களை நேரில் சந்தித்து சில நாட்கள் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பதிய விரும்புகிறேன் என்றார் தீபிகா.

More News >>