துணை முதல்வர் ஓ.பி.எஸ்.. மருத்துவமனையில் அட்மிட்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்குக் காய்ச்சல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று மாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் ஓ.பன்னீர் செல்வம் அட்மிட் செய்யப்பட்டார். அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக(மாஸ்டர் ஹெல்த் செக்கப்) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி ஹரீஷ் மணியன் கூறியுள்ளார்.

More News >>