3 புதிய படங்களுக்கு ஒ கே சொன்ன தளபதி.. கொரோனா தடை ஓய்வில் முடிவு..

தளபதி விஜய் அடுத்த 2021, 2022 என இரண்டு வருடங்களுக்கு 3புதிய படங்களை கொரோனா ஊரடங்கு தடை கால ஓய்வில் முடிவு செய்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை முடித்துள்ளார் விஜய். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி முடியும் தருவாயில் உள்ளது. மேலும் திரை அரங்கு உரிமையாளர்களுக்கு நம்பிக்கை தரும் படமாகவும் இது அமைந்திருக்கிறது.

கொரோனா ஊரடங்கில் விஜய் தனது அடுத்தடுத்த படங்கள் பற்றி முடிவு செய்து வைத்திருக்கிறாராம். தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார். இதற்கடுத்து தெறி படத்தைத் தயாரித்த ராமநாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பட நிறுவனத்துக்கு நடித்துத் தர உள்ளார். இது குடும்பபாங்கான படமாக உருவாகவிருக்கிறது. பாண்டி ராஜ் இயக்க உள்ளார். இதையடுத்து தற்போது மாஸ்டர் படத்தைத் தயாரித்துள்ள சேவியர் பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்துக்கு நடிக்க உள்ளார் விஜய். இப்படத்துக்கான கதை, இயக்குனர் யார் என்பது முடிவாகவில்லை. ஏற்கெனவே சுதா கொங்காரா, மகிழ்திருமேனி, மோகன்ராஜா, அட்லீ போன்றவர்கள் ஸ்கிரிப்ட் பற்றி விஜய்யிடம் பேசியிருக்கின்றனர்.

More News >>