தனிமைப்படுத்தலில் மினி ஜிம் வைத்த நடிகர்..

மொழி, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ்.இவர் ஆடு ஜீவிதம் படப் படைப்புக்காக ஜோர்டான் நாட்டுக்குப் படக் குழுவினருடன் சென்றார். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அந்த நாட்டிலேயே 50 நாட்களுக்கும் மேலாகச் சிக்கிக் கொண்டனர். சமீபத்தில் அவர்களை இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

பிருத்விராஜ் உள்ளிட்ட படக் குழுவினரை அவரவர் வீட்டில் கொரோனா தனிமைப்படுத்தலில் இருக்க அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி பிருத்விராஜ் வீட்டில் தன்னை தனி அறையில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஆடு ஜீவிதம் படக் கதாபாத்திரத்துக்காக 30 கிலோ எடை குறைத்திருந்தார். ஜோர்டானில் பணிகள் முடங்கியதால் மீண்டும் வெயிட் போட்டிருக்கிறார் பிருத்விராஜ் . தன்னை பழையபடி பாத்திரத்தின் தோற்றத்துக்குக் கொண்டு வரத் தினமும் ஜிம் பயிற்சி செய்கிறார். இதற்காகத் தனது அறையில் மினி ஜிம் வைத்திருக்கிறார்.அதே போல் பிருத்விராஜுடன் நடிக்கும் நடிகர்களும் மினி ஜிம் வைத்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

More News >>