பா ரஞ்சித் படத்தில் யோகிபாபு..

யோகிபாபு தனது திருமணத்துக்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் பிஸியாக நடித்து வந்தார். திடீரென்று ஒரு நாள் குலதெய்வ கோவிலில் வைத்து அவசர திருமணம் செய்து கொண்டார். தடபுடலாகத் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்து வி ஐ பிக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார் ஆனால் கொரோனா ஊரடங்கால் அதுவும் ஏமாற்றமாக அமைந்தது. தனிப்பட்ட விஷயங்களால் நொந்து போகாமல் பட வேலைகளில் கவனமாக இருக்கிறார் யோகிபாபு.

இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கொரோனா தடை முடிந்த பிறகு இதன் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளது. இப்படத்தை இயக்கும் இயக்குனர் பற்றியும் அப்போது தெரிய வரும் பா ரஞ்சித்தைப் பொறுத்த வரை 'சல்பேட்டா பரம்பரை' என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் ஆர்யா, கலையரசன் நடிக்க உள்ளனர்.

More News >>