திரிஷா இடுப்பில் சிம்பு.. இது என்ன வம்பு..

திரிஷா இடுப்பில் சிம்பு குழந்தை போல் உட்கார்ந்திருக்கும் படங்கள் நெட்டில் உலா வருகின்றன. இது என்னடா வம்பு என்று பார்த்தால் அதுக்கு ஒரு கதை சொல்கிறார்கள். சிம்புவும் திரிஷாவும் இணைந்து நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்தைக் கவுதம் மேனன் இயக்கவுள்ளார். அதற்கு முன்னதாக 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார்.

சில தினங்களுக்கு முன் இது இணைய தளத்தில் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது போல் விமர்சனங்களும் வந்தது. திரிஷாவிடம் 'ஐ லவ் யூ' சொல்கிறார் சிம்பு. அதற்கு திரிஷா, ' உன்னை எனது 3வது குழந்தைபோல் பார்க்கிறேன்' என்று பதில் அளிக்கிறார். அந்த வசனத்தை வைத்து மீம்ஸ்கள் வெளிவருகின்றன.திரிஷா தனது இடுப்பில் சிம்புவை குழந்தை போல் தூக்கி வைத்துக் கொஞ்சுவது போல் மீம்ஸ் வெளியாகி உள்ளது.

இது குறித்து கவுதம் மேனன் கூறும்போது, 'இந்த குறும்படம் வெளியானதுமே என்னைக் குழந்தை போல் திரிஷா இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்சுவது போல் மீம்ஸ் வரும் என்று சிம்பு அப்போதே சொன்னார். மேலும் இந்த குறும்பட கருவுக்கும் இது கள்ளக் காதல் என்று விமர்சனம் வந்திருக்கிறது. அது பார்க்கிற பார்வையைப் பொறுத்து இருக்கிறது' என்றார்.

More News >>