நடிகை கல்யாணி நடிப்புக்கு முழுக்கு போட்டது ஏன்? பாலியல் தொல்லை பற்றி அதிர்ச்சி தகவல்..

ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் சிறுமியாக நடித்தவர் கல்யாணி. என்கிற பூர்ணிதா. டிவிக்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். பின்னர் கத்தி கப்பல், இன்பா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். திடீரென்று சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.திருமணம் செய்துகொண்டு செட்டிலாகவிட்டார்.

சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்குக் காரணம் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருக்கிறார். கல்யாணி. அவர் கூறும்போது, 'சினிமாவில் இருந்து விலகியதற்குக் காரணம் என்னைத் தவறாகச் சிலர் பயன்படுத்தப் பார்த்தார்கள். படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்றால் அட்ஜெஸ்ட் மென்ட் அதாவது படுக்கைக்கு வரவேண்டும் என்று சில இயக்குனர்கள் கேட்டனர். அதனால்தான் நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஒரு டிவி சேனலில் இதுபோல் சம்பவம் நடந்தது' என்றார். கல்யாணி இதுபோல் மீ டூ புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>