விரைவில் சரித்திர படத்தில் நடிக்கிறார் தளபதி விஜய்.. கதையுடன் காத்திருக்கிறார் சசிகுமார்..

நடிகர் சசிகுமார், சுப்ரமணியபுரம், ஈசன் என இரண்டு படங்களை இயக்கியதுடன் நடித்தும் இருந்தார். அதன்பிறகு படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது எம்ஜிஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம். உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சசிகுமார் சரித்திர பின்னணியில் ஒரு கதை உருவாக்கி இருக்கிறார். இக்கதையை விஜய்க்குச் சொல்ல அவருக்கும் பிடித்து விட்டது,. நடிப்பதாகத் தலை அசைத்திருக்கிறார், சரித்திர பின்னணி படம் என்பதால் இது குறித்து சில நுணுக்கங்களைக் கேட்டறிய பாகுபலி இயக்குனர் ராஜமவுலியை சசிகுமார் சந்தித்துப் பேசினார். இதற்கிடையில் சூர்யாவை வைத்து இக்கதையை இயக்க எண்ணினார்,. பின்னர் விஜய்யை வைத்தே இயக்க தீர்மானித்திருப்பதுடன் அதிக பொருட் செலவில் இப்படத்தை உருவாக்க எண்ணி உள்ளார்.தற்போது சசிகுமார் 4 படங்களில் நடித்து வந்தாலும் விஜய் கால்ஷீட் கிடைத்தவுடன் சரித்திர படத்தை இயக்க கதையுடன் காத்திருக்கிறார். விரைவில் விஜய்யின் கால்ஷீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சசிகுமார்.

More News >>