சந்தோஷ் சிவன் படத்துக்குக் குரல் கொடுக்கும் பிரித்விராஜ், யோகிபாபு..

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சந்தோஷ் சிவன் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்கிறார். மஞ்சுவாரியர், எஸ்தர், நெடுமுடி வேணு உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். இப்படத்தின் கதையின் முன்னோட்டத்தைத் திரையில் விளக்குவதற்காக பிரித்விராஜிடம் குரல் கொடுக்க கேட்டிருந்தார் சந்தோஷ் சிவன்.

இது பற்றி அவரிடம் கேட்டபோது, பிரித்விராஜ் ஒரு சில மாதத்துக்கு முன்பே டப்பிங் பேசி முடித்துவிட்டார். இதே படம் தமிழிலும் வெளியாக உள்ளதால் அதற்கு நடிகர் யோகிபாபு குரல் கொடுக்க உள்ளார் என்றார்.ஜாக் அண்ட் ஜில் பட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது. முடிவடையும் தருவாயில் உள்ள இப்படம் லாக் டவுனுக்கு பிறகு திரைக்கு வர உள்ளது.

More News >>