கீர்த்தி சுரேஷ் படம் பார்க்கச் சொல்லி தீபிகா சிபாரிசு..

ஹீரோயின்களுக்குள் போட்டி நிலவுவதால் ஒருவர் நடிப்பை இன்னொரு நடிகை புகழ்வது குதிரைக் கொம்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் கோச்சடையான் நடிகை தீபிகா படுகோனே, நடிகை கீர்த்தி சுரேஷின் படத்தைப் பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்திருக்கிறார்.

தீபிகா படுகோனே கொரோனா ஊரடங்கால் மும்மையில் கணவருடன் வீட்டிலிருக்கிறார். ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் விதமாகத் தினமும் அவர்களுக்காக இணைய தள பக்கத்தில் மெசேஜ், வீடியோக்கள் பகிர்ந்து வருகிறார். ஓய்வு நேரத்தில் ஒடிடி தளத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியாகி உள்ள மகாநதி (தமிழில் நடிகையர் திலகம்) படத்தை தீபிகா பார்த்தார். பின்னர் இணையதள இண்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷின். மகாநதி பட போஸ்டரை வெளியிட்டு, இப்போதே இந்த படத்தைப் பாருங்கள் வாட்ச் இட் நவ்) என்று மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.

தீபிகாவின் மெசேஜை பார்த்த மகாநதி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின், காலையில் எழுந்தவுடன் இனிமையான விஷயமாக உங்கள் மெசேஜ் அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டு தீபிகாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

More News >>