பழம்பெரும் பாடலாசிரியர் மரணம்..

பழம்பெரும் பாடலாசிரியர் யோகேஷ் கவுர் (வயது 77). 1970களில் பிரபல பாடல்களாக வலம் வந்த ஜிந்தகி கைசி ஹை பெஹலி, நா போல் தும் நா மைனெ குச் கஹ போன்ற மறக்கமுடியாத பாடல்களை எழுதியவர். மும்பையில் வசித்து வந்த இவர் நேற்று மரணம் அடைந்தார். ஹிருஷிகேஷ் முகர்ஜி மற்றும் பாசு சட்டர்ஜி படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கினார்.

யோகேஷ் கவுர் மரணத்துக்குப் பிரபல இந்தி சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் போன்ற பாலிவுட் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல டிவி நடிகர் சுமீத் ராகவன் மறைந்த பாடலாசிரியர் நினைவாக டிவிட்டர் பக்கத்தில் ஆர்மோனியம் இசைத்தபடி யோகேஷின் பாடலை பாடி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

More News >>