சமந்தாவின் மாடி தோட்டம்.. காய் கனி வளர்க்கிறார்..

நடிகை சமந்தா நடிகர் நாகசைதன்யா காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஐதராபாத்தில் உள்ள பங்களாவில் வசிக்கின்றனர்.கொரோனா தடையால் வீட்டிலிருக்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஊரடங்கு தளர்வு நேரத்தில் இருவரும் காரில் சென்று வீட்டுத் தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்து வந்தனர்.

வீட்டு மொட்டை மாடியில் நீச்சல் குளம் அமைத்திருக்கின்றார் சமந்தா. அருகில் ஓய்வு எடுப்பதற்கான இடமும் அமைத்துள்ளார். மீதமுள்ள இடத்தில் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியமான காய் கனிகள் வளர்க்கும் தோட்டம் அமைத்துள்ளார். சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல், அஸ்வின் சரவணன் இயக்கும் திகில் படம் மற்றும் கன்னடம், தெலுங்கு மொழிப் படங்கள் உள்ளிட்ட 4 படங்களில் நடிக்கிறார்.

More News >>