நடிகர் மனோபாலா மீது வடிவேலு புகார். நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

நடிகர் வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்க தனி அதிகாரிக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில்,நான் 30 வருடங்களுக்கும் மேலாக நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். சமீபத்தில் நடிகர் மனோபாலா நடிகர் சிங்கமுத்துவிடம் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி எடுக்கும்போது என்னைப் பற்றி அவரிடம் கேள்விகள் கேட்டுள்ளார்.

அதற்கு என்னைப் பற்றி சிங்கமுத்து தரக்குறைவாகவும், பொய் பிரச்சாரங்களையும் செய்திருக்கிறார். அந்த வீடியோவை பிரபலங்கள் உள்ள வாட்ஸ் அப் குரூப்பிலும் பகிர்ந்திருக்கிறார். இதனால் நான் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன். எனக்கும் சிங்கமுத்துவுக்கும் ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு உள்ளது. எனவே மனோபாலா மீதும், சிங்கமுத்து மீதும் நடிகர் சங்க சட்ட விதி 13ன் படி நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்

More News >>