கே.என்.லட்சுமணன் மரணம்... பிரதமர் மோடி இரங்கல்...

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கே.என்.லட்சுமணன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றியிருந்த லட்சுமணன் இன்று மரணமடைந்தார். இவர் கடந்த 1944ம் ஆண்டிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

அதன்பின்னர், பாஜகவில் இணைந்து 1984-1989, 1996-2000ம் ஆண்டுகளில் மாநில தலைவராக பணியாற்றினார். 2001ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றிருக்கிறார்.லட்சுமணன் மறைவுக்குப் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் பாஜக தலைவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், லட்சுமணன் தமிழக மக்களுக்குச் சேவை ஆற்றுவதிலும், பாஜகவைத் தமிழகத்தில் வளர்ப்பதிலும் அரும் பணியாற்றியவர். நெருக்கடி நிலையை எதிர்த்த போராட்டங்களில் அவரது பங்கு நினைவுகூரத்தக்கது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>