யார்போனா என்ன நானிருக்கேனடி.. யாருக்கு ஆறுதல் சொல்கிறார் விக்னேஷ் சிவன்..

டைரக்டர் விக்னேஷ் சிவன், நடிகை நயந்தாரா கடந்த ஐந்து வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அதில் நடித்த நயந்தாராவுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயந்தாரா நடிக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி, சமந்தாவும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக லோகேஷன் பார்க்க கேமிராமேனுடன் வெளியூர் சென்றார் விக்னேஷ் சிவன். அப்போது மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றுக்கு ஒரு சில வினாடிகள் நடித்த காட்சியை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார். இதனை உடன் சென்ற ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கண்ணான கண்ணே கலங்காதே யார் போனால் என்ன நானிருக்கேனடி.. என்ற சென்டிமென்ட்டான பாடலை வெளியிட்டிருக்கிறார். அடிக்கடி நயன்தாராவுக்கு ஆதரவாக விக்னேஷ் சிவன் பாடல்கள் வெளியிட்டு வருகிறார். இந்த பாடலும் நயன்தாராவுக்கு ஆறுதல் கூறும் பாடலாக அவர் வெளியிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

More News >>