இந்தியாவில் கொரோனா பலி 5598 ஆக உயர்வு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98,706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5598 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் பல மாநிலங்களில் நுழைந்து விட்ட கொரோனா வைரஸ், இன்னமும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஜூன்2) காலை வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் நேற்று புதிதாக 8,171 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று மட்டுமே 204 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98,706 ஆக உயர்ந்துள்ளது. 95,526 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5598 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 68 ஆயிரம் பேருக்கும், தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

More News >>