கர்ப்பிணி யானையை வெடி வைத்துக் கொன்ற மனிதர்கள்.. திரிஷா கடும் கண்டனம்...
கேரளாவின் மலப்புரத்தில் கொரோனா லாக்டவுன் நிலவும் நிலையில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு மர்ம ஆசாமிகள் பட்டாசுகளுடன் கூடிய பழத்தைத் தந்தனர். அதைச் சாப்பிட்ட யானை சிறிது நேரத்தில் இறந்தது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் சமூக ஊடகங்களில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். யானையின் மரணத்திற்குக் காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று போலீசுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் திரிஷா கூறும்போது, உண்மையான வைரஸ் மனிதர்கள் தான் எனத் தெரிவித்திருக்கிறார். உருக்கமான யானை கார்ட்டூன் ஒன்றும் வெளியிட்டிருக்கிறார். அதே போல் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பிரணிதா சுபாஷ். நடிகர் நீரஜ்மாதவ் போன்றவர்களும் அதிர்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.