இளையராஜாவின், இசை ஒ டி டி.. அனுபவங்களை நேரில் பகிர உள்ளார்..

இசை அமைப்பாளர் இளையராஜா புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது :என் பிறந்த நாளில் என்னைச் சந்திக்க முடியவில்லையே என்று பலரும் எண்ணி இருப்பார்கள். இப்போதுள்ள சூழல் உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். ஆனாலும் தினமும் இசை வடிவில் நான் உங்களைச் சந்திக்கிறேன். இனி நேரடியாக உங்கள் இல்லத்துக்கு நேரில் வரவிருக்கிறேன். இசை ஒ டி டி மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.

இதில் என்னுடைய இசை அனுபவங்கள் ஒவ்வொரு பாடலும் எப்படி உருவானது அதற்குக் காரணமாக இருந்தவர்கள்., அதற்கு எப்படி கஷ்டப்பட்டோம் யாரெல்லாம் பங்கேற்றார்கள் என எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளவுள்ளேன். மேலும் என்னுடன் பணியாற்றியவர்கள் நேரில் வந்து தங்கள் அனுபவங்களைப் பகிர உள்ளனர். விரைவில் இசை ஒ டி டி வரும் அதற்காகக் காத்திருங்கள். இந்த விஷயங்கள் வேறு எந்த சேனலிலும் வராது. இவ்வாறு அவர் கூறினார்.

More News >>