ரஜினியின் முத்து படத்திலிருந்து ஜெயராம் விலகியது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட நேரம் 1995. அந்த நேரத்தில் முத்து படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். இப்படத்தில் ரஜினிக்கு முதலாளியாக சரத்பாபு நடித்தார். முன்னதாக இந்த வேடத்தில் நடிக்க ஜெயராம் தேர்வு செய்யப்பட்டார். படப் பூஜையிலும் கலந்துகொண்டார்.

ஆனால் அடுத்த நாளே படத்திலிருந்து வெளியேறினார். அப்போது அது பரபரப்பாகப் பேசப்பட்டது. முத்து படத்திலிருந்து விலகியது ஏன் என்பது பற்றி சமீபத்தில் ஜெயராம் கூறும்போது, அப்படத்தில் ரஜினி கன்னத்தில் நான் அறைவது போல் காட்சி இருந்தது. அவரது கன்னத்தில் நான் அறைந்தால் ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்று கருதியதால் விலக நேர்ந்தது என்றார்.

More News >>