14 நாள் தனிமை முடிந்து குடும்பத்துடன் இணைந்த ஹீரோ.. மனைவி, மகள் ஹேப்பி..

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மக்களைப் பாதித்திருக்கும் நிலையில் அதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு பல குடும்பங்களை பிரித்து வைத்திருக்கிறது. ஊர் விட்டு ஊர் சென்றவர்கள், நாடு விட்டு நாடு சென்றவர்கள் திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக இந்தியாவிலிருந்து ஜோர்டான் நாட்டுக்குச் சென்றவர் நடிகர் பிரித்விராஜ். கொரோனா தடையால் இரண்டு மாதம் அங்கேயே சிக்கிக் கொண்டார். பலரும் கோரிக்கை விட்டதன் அடிப்படையில் அரசு தலையிட்டு அவரையும், படக் குழுவையும் விமானத்தில் மீட்டு வந்தனர். கேரளா திரும்பியும் உடனே குடும்பத்துடன் இணைய முடியாமல் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டார். தனிமைப்படுத்தல் முடிந்த நிலையில் பிரித்விராஜுக்கு கொரோனா தொற்று பரிசோனை மீண்டும் நடந்தது. பாதிப்பு இல்லை என்று தெரிந்த பிறகு மனைவி, மகளை வீட்டிற்குச் சென்று சந்தித்தார். குடும்பத்தினருடன் இணைந்த மகிழ்ச்சியை செல்பி எடுத்து வெளியிட்டார்.

More News >>