ராசி கண்ணாவின் காதலன் யார்?

நடிகை ராசி கண்ணா நீண்ட நாட்களாகத் தெலுங்கு படங்களிலேயே நடித்து வந்தார். இமைக்கா நொடிகள் மூலம் தமிழில் நடிக்க வந்தார். தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறார். சங்கத் தமிழன் , அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது அரண்மனை 3, சூர்யா 39 படங்களில் நடிக்கிறார். ராசி கண்ணா பாய் பிரண்டை காதலிக்கிறார் என்று தகவல் பரவியது.

இது குறித்து அவர் கூறும்போது,கொரோனா ஊரடங்கில் ஊரே அடங்கிப்போயிருக்கிறது. இந்த நேரத்தில் காதலிப்பதாக என்னைப் பற்றி கிசு கிசு எழுதுகின்றனர். இப்போதைக்கு என் எண்ணம் முழுவதும் நடிப்பிலும், நல்ல படங்களாகத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் தான் இருக்கிறது. இந்த நிலையில் திருமணத்தை பற்றியோ காதலை பற்றியோ நினைக்கவில்லை. வருங்கால கணவருக்கு எந்த இட ஒதுக்கீடும் இப்போது நான் செய்யவில்லை. லாக் டவுனில் புத்தகங்கள் படிப்பதில் தான் என் நேரத்தைச் செலவிடுகிறேன். புத்தகங்களுடன்தான் உறவில் இருக்கிறேன். எனவே காதல் என்று வதந்திகளைப் பரப்பாதீர்கள் எனத் தெரிவித்தார் ராசி கண்ணா.

More News >>