நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மரணம் நடிகைகள் இரங்கல்.. நடிகர் நேரில் அஞ்சலி..

நடிகர் அர்ஜுனின் தம்பியும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (வயது 39) மாரடைப்பில் நேற்று திடீர் மரணம் அடைந்தார். இளம் வயதே ஆன அவரது மரணம் பற்றி தகவல் நேற்று மதியம் வெளியான போது பலரும் நம்ப மறுத்தனர். அது உறுதிதான் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இறந்த சிரஞ்சீவி சார்ஜா, காதல் சொல்ல வந்தேன், நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மேக்னாராஜின் கணவரும் ஆவார். சிரஞ்சீவி சார்ஜாவின் மரணத்தையடுத்து பலரும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். நடிகர் பிரித்விராஜ் கூறும்போது,சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மனைவி நடிகை மேனாவிக்கும், குடும்பத்தினருக்கும் சிரஞ்சீவி சார்ஜாவின் இழப்பைத் தாங்கும் வலிமை இறைவனைத் தர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்றார்.சிரஞ்சீவி சார்ஜா மரணத்தை நம்பவே முடியவில்லை. அது உண்மை தான் என்ற தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்து விட்டேன். திறமையான நடிகர், நல்ல உள்ளம் படைத்தவர். சிரஞ்சீவி சார்ஜா ஆன்மா ஆன்மா சாந்தி அடையட்டும் என நடிகை குஷ்பு தெரிவித்திருக்கிறார்.

என் இதயம் உடைந்து விட்டது. இந்த முடிவு அவருக்கு ரொம்பவே சீக்கிரமாக வந்துவிட்டது, என்னால் சோகத்தை விவரிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை என ராஷ்மிகா மந்தன்னா கூறி உள்ளார்.ரொம்பவும் கலகலப்பாகப் பழக்கக் கூடியவர் எல்லாவறையும் பாசிடிவ் பார்க்கக் கூடியவர்.இவ்வளவு இளம் வயதில் மறைந்துவிட்டார். அவர் ஆன்மா அமைதி கொள்ளட்டும் என்று நிக்கி கல்ராணி தெரிவித்திருக்கிறார். மேலும் அல்லு சிரீஸ், நடிகை கீர்த்தி கர்பண்டா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.நான் ஈ பட நடிகர் கிச்சா சுதீப், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட சில நடிகர்கள் நேரில் வந்து சிரஞ்சீவி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

More News >>