வீடியோ காலில் டப்பிங் பேசிய அஞ்சலி, கல்கி.. விக்னேஷ் சிவன் பதிவு செய்தார்..

கொரோனா ஊரடங்கில் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது. டைரக்டர் விக்னேஷ் சிவன் தனது படமொன்றுக்கு நடிகைகள் அஞ்சலி, கல்கி கொச்லின் ஆகியோரை வீடியோ காலில் அழைத்து டப்பிங் பேசவைத்தார். டப்பிங் பேசிய இருவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். அந்த வீடியோவை விக்னேஷ் பகிர்ந்திருக்கிறார்.

விக்னேஷ் சிவன் வெப் சீரியலுக்கு டப்பிங் செய்தாரா அல்லது குறும்படத்துக்குச் செய்தாரா என்று கூறவில்லை. அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்க உள்ளது.

More News >>