நடிகை அபர்ணாவுக்கு பாலியல் தொல்லை...

மலையாள நடிகை அபர்ணா நாயர், மதுரன் நரங்கா, கல்கி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் எதுவும் நடக்கலாம் என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார்.டிவிட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணா பலருடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஒரு நெட்டிஸன் அபர்ணாவுக்கு ஆபாசமான வார்த்தைகளில் கமென்ட் பகிர்ந்தார். அதைக்கண்டு கோபமடைந்த போதும் அவருக்குப் புத்திமதி சொல்லி கமென்ட் பகிர்ந்தார்.யார் ஆசையையும் தீர்த்து வைப்பதற்காக நான் இங்கிருக்கவில்லை. நீங்கள் என்னைக் கட்டிப் பிடிப்பதுபோல் நினைத்தால் அப்போது உங்களின் மகள் ஞாபகம்தான் வரவேண்டும் என்றார். இவ்வாறு கூறிய அவர் அந்த நபரின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

More News >>