நடிகர் பிரித்விராஜ் படக் குழுவில் பணியாற்றியவருக்கு கொரோனா.. ஜோர்டான் நாட்டில் சிக்கித் தவித்தவர்கள்..

மொழி, நினைத்தாலே இனிக்கும், கனா கண்டேன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ் .இவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.பிரித்விராஜ் இயக்கும் ஆடு ஜீவிதம் மலையாள படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் பாலைவனப் பகுதியில் படமாக்கத் திட்டமிட்டுப் படக் குழு சென்றது. அப்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 2 மாதம் படக் குழுவினர் ஜோர்டான் நாட்டில் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் விமானத்தில் மீட்டு வரப்பட்டனர்.

கேரளா வந்ததும் படக் குழுவினர் தனிமைப் படுத்தப்பட்டனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்ததும் படக் குழுவினருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. 2வது படக் குழுவைச் சேர்ந்த 58 வயதான ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. திருச்சுரிலிருந்த அவரை உடனடியாக குன்னம்குளம் தாலுகா மருத்துவமனையில் அழைத்து வந்து சேர்த்தனர். டாக்டர்கள் குழு சிகிச்சை அவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறது.

More News >>