ஆந்திர சட்டசபை பட்ஜெட் தொடர் ஜூன் 16ல் தொடக்கம்..

ஆந்திராவில் சட்டசபை வரும் 16ம் தேதி கூடுகிறது. மாநில அரசின் 2020-21ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு சட்டசபைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விட்டது. இதனால், இந்த ஆண்டு(2020-2021) பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.இந்நிலையில், வரும் 16ம் தேதியன்று சட்டசபை தொடங்கவுள்ளது. முதல் நாளில் கவர்னர் உரையாற்றுவார். மேலும், இந்த தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் கவர்னர் ஹரிச்சந்தன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>