39 வயதில் இறந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் கடைசி இணைய தள பதிவு.. சகோதரர் உருக்கம்..

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் 7 ம் தேதி திடீர் மாரடைப்பில் இறந்தார். அவருக்கு வயது 39. சிரஞ்சீவி சார்ஜா கொரோனா ஊரடங்கில் பெங்களூர் வீட்டில் இருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மரணம் அடைந்தார்.

இது திரையுலகினரை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரையும், 3 மாத கர்ப்பமாக இருக்கும் இளம் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் ஆகியோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.சிரஞ்சீவி சார்ஜா இறப்பதற்கு முன்பு தனது சகோதரர்கள் துருவ சார்ஜா , சூரஜ் சார்ஜா இருவரையும் தோளோடு சேர்த்துக் கட்டிப் பிடித்தபடி இருக்கும் படத்தை வெளியிட்டு , நாங்கள் இப்போதும் இப்படியே தான் இருக்கிறோம் என தங்களது ஒற்றுமையைக் கூறியிருந்தார்.

அந்த பதிவை சூரஜ் சார்ஜா எடுத்துப் பகிர்ந்திருப்பதுடன், இது தான் உங்களின் கடைசி பதிவாக இருக்கும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. உங்களை இழந்துவிட்டோம் என்பதை இன்னும் கூட எங்களால் ஜீரணிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.மறைந்த சிரஞ்சீவி சார்ஜா தமிழ் நடிகர் அர்ஜுனின் சகோதரர் ஆவார்.

More News >>