கொரோனா தனிமையில் கணவருக்குச் சிகை அலங்காரம் செய்த நடிகை..

நடிகை பிரீத்தி ஜிந்தா கணவருடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். கடந்த 83 நாட்களாகக் கணவர் குட் எனஃப் சலூன் சென்று முடி வெட்ட முடியாமல் இருந்தார். அவருக்கு பிரீத்தி ஜிந்தாவே அழகாக முடி வெட்டி அழகு பார்த்தார். அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

என் கணவர் என்னை முழுமையாக நம்புகிறார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கு முடி வெட்டிவிட்டேன். அது நன்றாகவே வந்திருக்கிறது. ஆனால் அதுபற்றி நான் யோசிக்கப் போவதில்லை என்றார்.பிரீத்தி ஜிந்தா இந்தி படங்களில் நடித்தாலும் தமிழில் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தான் அறிமுகமானார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் அணியில் முதலாளியாக இருக்கிறார் பிரீத்தி.

More News >>